தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் பதவி உயர்வு: தலைமைச் செயலாளர் உத்தரவு

DIN

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக  அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளிடையே பதவி உயர்வு மற்றும் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், பணி ஓய்வுபெறும் நாளில் செயற்கை காலியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு அளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலேயே பணப் பலன்களை சிலர் பெறுவதாகவும் அரசிடம் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. 

எனவே, தகுதியுள்ள அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிரிக்க வேண்டும். செயற்கை காலிப் பணியிடங்களை ஏற்படுத்துதலை தவிர்க்க வேண்டும். மேலும், தற்காலிக பதவி உயர்வு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

அரசுப் பணியாளர்களின் இறப்பு, பணி ஓய்வு, நீண்ட கால விடுப்பு ஆகியவற்றால் ஏற்படும் காலிப் பணியிடங்களை நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி நிரப்புவதற்கு தடையேதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

அரசு ஊழியர்கள் அனைவரும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT