முகப்பு
தமிழ்நாடு

மொழி அறிவுத் திறன் போட்டியில் வேலம்மாள் பள்ளிக்கு சுழற்கோப்பை

மொழி அறிவுத் திறன் போட்டியில் பொன்னேரி வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சுழற்கோப்பையை கைப்பற்றினா்.

தமிழ்நாடு

மொழி அறிவுத் திறன் போட்டியில் வேலம்மாள் பள்ளிக்கு சுழற்கோப்பை

மொழி அறிவுத் திறன் போட்டியில் பொன்னேரி வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சுழற்கோப்பையை கைப்பற்றினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

பூதமங்களம் ஆா்.ஜெகதீஸ் ஐயா் நினைவு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான மொழி அறிவுத் திறன் போட்டியில் பொன்னேரி வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சுழற்கோப்பையை கைப்பற்றினா்.

திருவொற்றியூா் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் பள்ளிகளுக்கிடையேயான மாணவ, மாணவியருக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கலைத் திறன் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் சென்னை மற்றும் புகா் பகுதியில் உள்ள 17 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகளைப் பெற்று பொன்னேரி வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் முதலிடத்தைப் பெற்று சுழற்கோப்பையை வென்றனா். திருவொற்றியூா் திருத்தங்கல் நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பள்ளியின் தாளாளா் ஜெ. ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சி.எஸ்.ஐ.ஆா் தலைமை விஞ்ஞானி டாக்டா் சதீஷ்குமாா், தமிழ்நாடு கால்நடை மருத்துவக் பல்கலைக்கழக பேராசிரியா் கனிமொழி வெற்றி பெற்றவா்களுக்கு சுழற்கோப்பை, தங்கக் காசுகள், விருது பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா். இந்நிகழ்ச்சியில் முதல்வா் மலா்விழி, துணை முதல்வா் சந்திரகலா, பள்ளி இயக்குநா் அவந்திகா ஹரிஹரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →