மாயத்தேவர் 
தமிழ்நாடு

அதிமுகவின் முதல் எம்.பி. மாயத் தேவர் காலமானார்

அதிமுகவிலிருந்து மக்களவை உறுப்பினராக முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட மாயத்தேவர்(வயது 88) உடல்நலக் குறைவால் காலமானார்.

DIN

திண்டுக்கல்: அதிமுகவிலிருந்து மக்களவை உறுப்பினராக முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட மாயத்தேவர்(வயது 88) உடல்நலக் குறைவால் காலமானார்.

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, 1972-ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத் தேர்தலில், முதல்முறையாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.

திண்டுக்கல் அடுத்துள்ள சின்னாளப்பட்டியில் மனைவி சரஸ்வதி மற்றும் மகன் செந்தில்குமார் என்ற வெற்றித் தமிழன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தனது 88ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை அவர் காலமானார்.

இறுதிச் சடங்குகள் சின்னாளப்பட்டியிலுள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலை 4 மணி நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு - 9043160045.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT