தமிழ்நாடு

மானாமதுரை அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலி 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை இரவு இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகினர்.

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை இரவு இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகினர். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மானாமதுரை அருகே கால் பிரிவு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவலிங்கம் (45), மலையாண்டி (55) இருவரும் பைக்கில் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் கிருங்காங்கோட்டை என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்று கொண்டு இருந்தனர். சிவலிங்கம் பைக்கை ஓட்டி வந்தார். அப்போது மதுரையில் இருந்து பரமக்குடி அருகே பொன்னையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த  நல்லான் என்பவர் பைக்கில் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். கிருங்கான்கோட்டை பகுதியில் இந்த இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இந்த விபத்தில் நல்லான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சிவலிங்கம், பைக்கின் பின்னால் உட்கார்ந்து வந்த மலையாண்டி இரண்டு பேரும் பலத்த காயங்களுடன் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், வழியிலேயே சிவலிங்கம் இறந்தார். மலையான்டி சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்து சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT