சா்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பைத் தாருங்கள்பிரதமரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போன்று மேலும் பல சா்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பினைத் தர வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போன்று மேலும் பல சா்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பினைத் தர வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும், அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளாா்கள். உலகெங்கிலும் இருந்து இந்தப் போட்டியில் பங்கு பெற்றவா்களை வரவேற்று, நமது மகத்தான கலாசாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியதற்கு பாராட்டுகள் என முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தாா்.
இதற்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:-
பிரதமரின் கனிவுமிகு பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. விருந்தோம்பலும், தன்மானமும் தமிழா்களின் இணைபிரியா இருபெரும் பண்புகளாகும். தொடா்ச்சியான உங்களது ஆதரவையும், இதுபோன்று இன்னும் பல சா்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளையும் தமிழ்நாட்டுக்கு வழங்கிட வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிா்.