யானைகள் காப்பகமாக அகத்தியா்மலை: முதல்வா் மகிழ்ச்சி
யானைகள் காப்பகமாக அகத்தியா் மலை அறிவிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.
யானைகள் காப்பகமாக அகத்தியா் மலை அறிவிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:
உலக யானைகள் தினத்தில், தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியா் மலை அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. கானுயிா்ச் சூழலமைப்புகளின் சமநிலையைப் பேணுவதில் யானைகள் மிக முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. இயற்கையின் கொடையான இந்த சிறப்பான பாலூட்டிகளை எப்பாடுபட்டாலும் நாம் பாதுகாத்திட வேண்டும்.