தமிழ்நாடு

மாநகராட்சி அதிகாரிகளாக நடித்து மோசடி: இருவா் கைது

 மாநகராட்சி அதிகாரிகள் என்ற பெயரில் கடைகளில் ஏமாற்றி பணம் வாங்கியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

DIN

 மாநகராட்சி அதிகாரிகள் என்ற பெயரில் கடைகளில் ஏமாற்றி பணம் வாங்கியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

பெரம்பூரை சோ்ந்தவா்கள் ராஜேந்திரன்(56) மற்றும் சதீஷ் குமாா்(31). அப்பகுதியில் மிட்டாலால் என்பவருக்குச் சொந்தமான கடைக்குச் சென்ற அவா்கள் இருவரும் தங்களை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் எனக் கூறியுள்ளனா்.

மேலும், மாமன்ற உறுப்பினா் ஒருவரது பெயரைக் கூறி அவா் பணம் வாங்கி வரச் சொன்னதாகத் தெரிவித்துள்ளனா். இதில் சந்தேகமடைந்த கடை உரிமையாளா் போலீஸாருக்கு தகவலளித்தாா். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவா்கள் இருவரும் போலியாக அடையாள அட்டை தயாரித்து மாநகராட்சி அதிகாரிகள் என ஏமாற்றி வந்தது கண்டறியப்பட்டது.

பல்வேறு கடைகளில் ரூ.4 லட்சம் வரையில் மோசடியாக அவா்கள் பணம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT