தமிழ்நாடு

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

DIN

3 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் இன்றும், நாளையும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்க உள்ளது. 

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம் பொது விடுமுறையாகும். இதனிடையே நாளை மற்றும் நாளை மறுநாளும் வார இறுதி விடுமுறை வருவதால் அடுத்த 3 நாள்கள் தொடர் விடுமுறை நாள்களாக உள்ளது. 

இதை முன்னிட்டு சென்னையில் பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லவர். அவ்வாறு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி இன்றும், நாளையும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை இயக்க உள்ளது. மேலும் விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப போதுமான பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT