முகப்பு
தமிழ்நாடு

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.252 கோடி ஒதுக்கீடு: அரசாணை

கரும்பு விவசாயிகளுக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை வழங்க ரூ.252 கோடியை ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட் 2022, 4:08 pm IST
கோப்புப் படம்
பகிர்:

கரும்பு விவசாயிகளுக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை வழங்க ரூ.252 கோடியை ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.252 கோடி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 12 சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்துள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

கரும்புக்கு போதிய விலை இல்லாமல், மத்திய அரசு வழங்கக்கூடிய தொகையை முழுமையாக பெற முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கரும்பு விவசாயிகளுக்கு ரூ.252 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments