பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த செட்டே (எ) சீனிவாச முல்லா கெவுடு (23) என்பவரை மகாராஷ்டிர மாநில போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த செட்டே (எ) சீனிவாச முல்லா கெவுடு (23) என்பவரை மகாராஷ்டிர மாநில போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம், பங்கரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முல்லா மகன் செட்டே (எ) சீனிவாச முல்லா கெவுடு (23). இவர் மீது, அந்த மாநிலத்தில் உள்ள தர்மராஜா காவல் நிலையத்தில், 2022 பிப்ரவரியில் 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பில் தொடர்பில் இருந்த இவர், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பாப்பம்பாடி அருகேயுள்ள பாரதிநகரில் விவசாயி ஒருவரது வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்த தகவல் அறிந்த மகாராஷ்டிர போலீஸார், சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் செட்டே (எ) சீனிவாச முல்லா கெவுடுவை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.