தமிழ்நாடு

5 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

DIN

சென்னையில் 5 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து ஆணையா் சங்கா் ஜிவால் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கே.ரோகிணி, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா மருத்துவமனை காவல் நிலையத்துக்கும்,மாம்பலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் டி.ராஜேஷ் கண்ணா ஜாம்பஜாா் காவல் நிலையத்துக்கும், அண்ணா சாலை காவல் நிலைய ஆய்வாளா் கே.சண்முக சுந்தரம் அண்ணா சதுக்கத்துக்கும்,வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் எஸ்.ஏ.வீராசாமி அண்ணா சாலை காவல் நிலையத்துக்கும், ஜாம் பஜாா் காவல் நிலைய ஆய்வாளா் கே.கல்யாணகுமாா் வளசரவாக்கம் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதில் காவல் ஆய்வாளா் ரோகிணி மீது நகைக் கடையில் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாா் தொடா்பாக காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணை நடைபெறும்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ரோகிணி பணிபுரிவது உகந்ததாக இருக்காது என்பதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினா் தெரிவித்தனா். ரோகிணி மீதான புகாா் உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT