தமிழ்நாடு

நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்ட ஓட்டுநர்: நடத்துநர் பலி

DIN

சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே, சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க திடிரென பேருந்தின் ஓட்டுநர் பிரேக் போட்டபோது, பேருந்திலிருந்து நடத்துநர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

கோரிமேடு பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நாய் குறுக்கே வந்ததைப் பார்த்த ஓட்டுநர், பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக, பேருந்தின் படிகட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த நடத்துநர், பேருந்து திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட தடுமாற்றத்தில் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்.

தலையில் படுகாயமடைந்த நடத்துநர் ராஜேந்திரன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT