தமிழ்நாடு

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: சுவாமி சண்முகர் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி வீதியுலா

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளினார்.

ஆவணித் திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். 

வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரம்

முக்கிய  நிகழ்வாக செவ்வாய்க்கிழமை ஏழாம் திருவிழாவை முன்னிட்டு மாலையில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி சண்முகர், சிவப்பு சாத்தி தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். 

சிவப்பு சாத்தி தங்க சப்பரம்

புதன்கிழமை எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை வெள்ளைச் சாத்தி பெரிய வெள்ளிச்சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற ஆக. 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT