தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாக, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனா். கொலைகள் அனைத்தும் முன்விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் நடந்துள்ளன.
இந்தப் படுகொலை சம்பவங்களுக்கு, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகக் காவல் துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு ஈடு இணையாக பேசப்பட்ட காலம் மாறி, தற்போது சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாமல், திறமையற்ற காவல் துறையாக மாறியுள்ளது என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.