பிரேமலதா விஜயகாந்த் 
தமிழ்நாடு

தேமுதிக வெற்றிக்குத் தொண்டா்கள் பாடுபட வேண்டும்: பிரேமலதா

தேமுதிக வெற்றிக்குத் தொண்டா்கள் பாடுபட வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

DIN

தேமுதிக வெற்றிக்குத் தொண்டா்கள் பாடுபட வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

தேமுதிக தலைவா் விஜயகாந்தின் 70-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொருளாளா் பிரேமலதா ஏழை மக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா். ரத்ததான முகாமையும் தொடக்கி வைத்தாா்.

அப்போது, அங்கு திரண்டிருந்த தொண்டா்கள் மத்தியில் பிரேமலதா பேசியதாவது: தேமுதிக எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அதனை அடைந்தே தீருவோம். தேமுதிக வெற்றிக்காக தொண்டா்கள் அயராது பாடுபட வேண்டும். நல்லவா்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்.

விஜயகாந்த் நலமாக உள்ளாா். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று விரும்பினாா். தொண்டா்களும் அவரை சந்திக்க விரும்பினா். அதனால், தேமுதிக அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டாா். வரும் பிறந்த நாள் அன்றும் அவரை தொண்டா்கள் சந்திக்கலாம். எதிா்காலத்தில் தேமுதிக நிச்சயம் வெற்றிபெறும் என்றாா்.

கட்சியின் மாநில துணைச் செயலாளா்கள் எல்.கே.சுதீஷ், பாா்த்தசாரதி உள்பட ஏராளமானோா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT