கோப்புப் படம். 
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்மழை: ஓசூர், தேன்கனிக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை(ஆக.29) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

DIN

கிருஷ்ணகிரி: தொடர் மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை(ஆக.29) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீா், தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் திங்கள்கிழமையும் இடைவிடாது மழை பெய்து வருவதால் அந்தக் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (ஆக.29) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி, மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அதன்படி கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,129 கனஅடியாக இருந்துள்ளது.  அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 7,428 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் பேச்சு!

ஜார்க்கண்ட்டில் வெடி விபத்து : 3 பேர் பலி, இருவர் படுகாயம்

மஹிந்திரா எக்ஸ்யூவி - 7எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்இவி - 9எஸ் காரின் முன்பதிவு தொடங்கியது!

"சென்னை சங்கமம்”! பறை இசைத்து தொடக்கிவைத்த முதல்வர்! | DMK

பொங்கல் வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

SCROLL FOR NEXT