முகப்பு
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை! 

ஒகேனக்கல் காவிரியில் நாளை விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதித்து தருமபுரி ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:11 AM
பகிர்:

ஒகேனக்கல் காவிரியில் நாளை விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதித்து தருமபுரி ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலையில் 1.15 லட்சம் கன அடியாகவும், மாலையில் 1.8 லட்சம் கனஅடியாகவும் குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஆற்றில் நீா்வரத்து அதிகம் இருப்பதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 4-ஆவது நாளாகவும், ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 49-ஆவது நாளாகவும் திங்கள்கிழமை நீட்டிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நாளை விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதித்து தருமபுரி ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →