தமிழ்நாடு

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், 5 ஆண்டு சிறை!

மின் இணைப்பை மாற்றி அமைப்பதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

மின் இணைப்பை மாற்றி அமைப்பதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம். வணிகரது இவரது பழைய கடையில் இருந்த மின் மீட்டரை புதுக் கடைக்கு மாற்றித்தருமாறு கடந்த 2009 இல் மணல்மேல்குடி மனு அளித்துள்ளாா். அதற்கு, மணமேல்குடி மின்வாரிய அலுவலகத்தின் வணிக ஆய்வாளராகப் பணிபுரிந்த சண்முகசுந்தரம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

அவ்வாறு லஞ்சம் கொடுக்க விரும்பாத கல்யாணசுந்தரம் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அவா்களின் ஆலோசனைப்படி கல்யாணசுந்தரத்திடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சண்முகசுந்தரத்தை அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரெத்னா, குற்றம் சாட்டப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து சண்முகசுந்தரம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT