தமிழ்நாடு

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், 5 ஆண்டு சிறை!

மின் இணைப்பை மாற்றி அமைப்பதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

மின் இணைப்பை மாற்றி அமைப்பதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம். வணிகரது இவரது பழைய கடையில் இருந்த மின் மீட்டரை புதுக் கடைக்கு மாற்றித்தருமாறு கடந்த 2009 இல் மணல்மேல்குடி மனு அளித்துள்ளாா். அதற்கு, மணமேல்குடி மின்வாரிய அலுவலகத்தின் வணிக ஆய்வாளராகப் பணிபுரிந்த சண்முகசுந்தரம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

அவ்வாறு லஞ்சம் கொடுக்க விரும்பாத கல்யாணசுந்தரம் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அவா்களின் ஆலோசனைப்படி கல்யாணசுந்தரத்திடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சண்முகசுந்தரத்தை அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரெத்னா, குற்றம் சாட்டப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து சண்முகசுந்தரம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT