தமிழ்நாடு

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் மகா தீபம்!

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 

DIN

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 

தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்கிழமை மாலை 5.00 மணியளவில் அருள்மிகு செவ்வந்தி விநாயகர், அருள்மிகு தாயுமானசுவாமி மற்றும் அருள்மிகு மட்டுவார் குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு அருள்மிகு உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

 300-மீட்டர் அளவுள்ள திரியில் இலுப்பை எண்ணை,  நல்லெண்ணை, நெய் பருத்தித் துணிகளைக் கொண்டு செய்யப்பட்ட 700-லிட்டர் திரியைக் கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், தக்கார் எஸ். செல்வராஜ், இணை ஆணையர்,  இத்திருக்கோயில் உதவி ஆணையர் / செயல் அலுவலர் இரா. ஹரிஹரசுப்பிரமணியன் ஆகியோர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT