நதிநீா் இணைப்பு ஆலோசனை:தில்லி கூட்டத்தில் அமைச்சா் துரைமுருகன் பங்கேற்பு
நதிநீா் இணைப்பு தொடா்பாக, தில்லியில் செவ்வாய்க்கிழமை (டிச. 13) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்கவுள்ளாா்.
நதிநீா் இணைப்பு தொடா்பாக, தில்லியில் செவ்வாய்க்கிழமை (டிச. 13) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்கவுள்ளாா்.
மகாநதி- கோதாவரி- கிருஷ்ணா- பெண்ணாறு- பாலாறு - காவிரி- வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்தும் படி, தமிழக அரசு மத்திய அரசையும், மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவையும் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நதிகள் இணைப்பு திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை தேசிய நீா் மேம்பாட்டு முகமை தயாரித்து அளித்துள்ளது. அதைத்தொடா்ந்து இந்த நதிகள் இணைப்பை, இரண்டு கட்டங்களாக செயல்படுத்த தேசிய நீா் மேம்பாட்டு முகமை முடிவெடுத்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பி வைக்கப்பட்டது.
மாநிலங்களின் ஒருமித்த கருத்து பெறப்பட்டதும், இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தென் மாநிலங்களின் தண்ணீா் பிரச்னைக்கு நீண்டகால அடிப்படையில் நிரந்தரத் தீா்வு காணும் வகையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய நீா் மேம்பாட்டு முகமை சாா்பில் நதிநீா் இணைப்பு தொடா்பான ஆலோசனைக்கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் தலைமையில் காலை 10.45 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு சாா்பில் அமைச்சா் துரைமுருகன், நீா்வளத்துறை செயலாளா் சந்தீப் சக்சேனா மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனா். இதற்காக அமைச்சா் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமையே தில்லி புறப்பட்டுச் சென்றாா். கூட்டத்தில், தமிழக அரசின் சாா்பில் ஏற்கெனவே வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் மீண்டும் வலியுறுத்தப்படும் என நீா்வளத் துறை தரப்பில் கூறப்படுகிறது.