கோப்புப் படம் 
தமிழ்நாடு

தொடர் மழை: திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! 

தொடர் மழை எதிரொலியால் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.12) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

DIN

திருவள்ளூர்: தொடர் மழை எதிரொலியால் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.12) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: மாண்டஸ் புயலால் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

இந்த மழையால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.15 வரை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

டிப்ஸ்... டிப்ஸ்...

அரச இலைக் கொழுந்து துவையல்

புடலங்காய் தோசை

அவல் லாடு

SCROLL FOR NEXT