மேட்டூர் அணை நிலவரம்!
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிகிறது.
மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிகிறது.
திங்கள்கிழமை காலை 2-ஆவது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,600 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 ஆவது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 7,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிக்க | செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பு 1,000 கன அடியாக உயர்வு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 7,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.