கோப்புப் படம் 
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு விவகாரம்: தமிழக - கேரள தலைமைச் செயலர்கள் ஆலோசனை

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பாக தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, கேரள தலைமைச் செயலாளர் ஜாய் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். 

DIN

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பாக தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, கேரள தலைமைச் செயலாளர் ஜாய் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். 

சென்னையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், உச்சநீதிமன்ற உயா்மட்ட குழு தெரிவித்ததன் பேரில் இரு மாநில தலைமைச் செயலாளர்களும் இன்று மாலை ஆலோசனை செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், இருமாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் விவாதித்தால் தீர்வு காண வாய்ப்பு உள்ளது என உச்சநீதிமன்ற உயர்மட்ட குழு கருத்து தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்ற கருத்தின் அடிப்படையில் இன்று இரு மாநில தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, திட்டப் பணிகள், நிலை நிறுத்தப்பட வேண்டிய 142 அடி நீா்மட்ட உயரம், அணைப் பகுதிக்கு தளவாடப் பொருள்கள் கொண்டு வருவதில் ஏற்படும் இடையூறு போன்றவை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT