மேட்டூர் அணை நிலவரம்!
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 11,600 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 11,600 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,600 கன அடியிலிருந்து 11,600கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,600 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 11,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.