சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேயர் ஜெகன் உள்ளிட்டோரையும் வழக்கில் இருந்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் விடுவித்துள்ளது. 1996-2001 காலகட்டத்தில் அதிகமாக ரூ.2.31 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் கீதா ஜீவன் மீது வழக்கு தொடரப்பட்டது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: 'காசேதான் கடவுளடா’ விரைவில் துணிவு படத்தின் அடுத்த பாடல்..
இந்நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவனை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.