தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியது:  2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணையில்  நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் அணையின் கீழ் பகுதி கரையோரத்தில் வசிக்கும் கேரள மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

கம்பம்:  முல்லைப் பெரியாறு அணையில்  நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் அணையின் கீழ் பகுதி கரையோரத்தில் வசிக்கும் கேரள மக்களுக்கு பெரியாறு அணை பொறியாளர் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை புதன்கிழமை காலை 6 மணிக்கு அறிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 3.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 2.8 மி.மீ., மழையும் பெய்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,166.25 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது. அணையில் நீர் இருப்பு 7,396 மில்லியன் கன அடியாக இருந்தது.

ஏற்கனவே கடந்த டிச.3-ல் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது 141 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை அணையின் நீர் வள ஆதாரத்துறை தேக்கடி பிரிவு உதவி பொறியாளர் பி.ராஜகோபால் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT