எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த பாமக எம்எல்ஏ: கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி..!
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் காலில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விழுந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம்: முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் காலில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விழுந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் கபடி உள் விளையாட்டு அரங்கத்தை ஞாயிற்றுக்கிழமை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் தொடர்ந்து கபடி போட்டி தொடங்கி வைத்து வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் நிறைவில் வருகை தந்த சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள், மேடையில் இருந்த எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Advertisement
இதனை சினிமா பாணியில் எதுவும் கண்டு கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, அடுத்த தொண்டரை கவனிக்கத் தொடங்கினார். இதனால் மேலும் பரபரப்பு நிலவியது.
எடப்பாடி பழனிசாமி தன்னை கவனிக்கவில்லை என்று அந்த பக்கமும் இந்த பக்கமும் திரும்பிய பாமக பேரவை உறுப்பினர் இறுதியாக அவரது பார்வையில் படும்படி இடது பக்கம் சென்று நின்றுகொண்டார். அப்போது விழா குழு சார்பில் அவருக்கு சால்வை அணிவிக்கும் படி பழனிசாமி தெரிவித்ததையடுத்து அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது
அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காலில் பாமக பேரவை உறுப்பினர் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.