முகப்பு
தமிழ்நாடு

உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் இன்று தொடக்கம்

உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் இன்று தொடங்கப்பட்டுள்ளது.  

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:51 PM
பகிர்:

உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் இன்று தொடங்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் மாா்க்கமாக உதகைக்கு மலை ரயில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது.

மலை ரயில் பாதை அடா்ந்த வனப் பகுதி வழியாக செல்வதால் இந்த பகுதியில் உள்ள யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளை காண சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். 

இந்த நிலையில் உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பின் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.