மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் மஸ்தான் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மாநிலங்களவை முன்னாள் எம்.பி. மஸ்தான் உடல்நலக்குறைவால் இன்று(வியாழக்கிழமை) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு திமுகவில் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவராகவும் இருந்துள்ளார்.
மஸ்தான் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மஸ்தானின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மஸ்தான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.