தமிழ்நாடு

175 ஆண்டுகள் பழமையான தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

DIN

175 ஆண்டுகள் பழமையான தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்பட்டது. பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஒன்றுகூடி இயேசு கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடி சிறப்பு வழிபாடு செய்தனர்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூரில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடு இரவு நடைபெற்றது.

தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள திரு இருதய பேராலயத்தில் சிறப்பு வழிபாடு இரவு நடைபெற்றது.

முன்னதாக, தஞ்சை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிறிஸ்துவ பெருமக்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் புத்தாடை அணிந்து பேராலயத்திற்கு வந்தனர். 

தஞ்சை நகரில் உள்ள சென் பீட்டர்ஸ் பேராலயம், தூய இருதய ஆண்டவர் பேராலயம் என அனைத்து ஆலயங்களும் அலங்கரிக்கப்பட்டு குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இயேசு பிறந்ததை நினைவுகூரும் விதமாக குழந்தை இயேசு திருஉருவத்தை மாதா வேடமணிந்த பெண் வான தூதர், சூசையப்பர் வேடம் அணிந்தவருடன் வந்து பங்குத் தந்தையிடம் கொடுத்தார். 

அச்சொரூபத்தை பங்குத் தந்தை பெற்றுக் கொண்டு, புனிதம் செய்து அலங்கரிக்கப்பட்ட திருப்பீடத்தில் வைத்தார். அப்போது, தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மறையுரை, கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றன. பின்னர், மக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இதேபோல, மாநகரில் உள்ள பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களிலும் இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT