திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் செங்கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். 
தமிழ்நாடு

திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் செங்கரும்புடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் செங்கரும்புகளுடன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

DIN

    
திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் செங்கரும்புகளுடன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு வழங்க வேண்டும். கரும்புக்கு நியாயமான விலை வழங்க வேண்டும். செங்கரும்பு ஒன்று ரூ.15 என்ற விலைக்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில்100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மொபெட் மீது காா் மோதல்: முதியவா் மரணம்

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

SCROLL FOR NEXT