நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நாளை கருடசேவை
திருவெண்காடு அருகே நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நாளை இரவு கருடசேவை உற்சவம் நடைபெறுகிறது.
திருவெண்காடு அருகே நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நாளை இரவு கருடசேவை உற்சவம் நடைபெறுகிறது.
இதில் நாங்கூர் பகுதியைச் சுற்றியுள்ள 11 பெருமாள்கள் கலந்துகொண்டு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கின்றனர். அப்போது அந்த பெருமாள்களைப் பற்றி திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்கள் பாடப்பட்டு தீபாராதனை காட்டப்படும். இந்த கருட சேவை உற்சவத்தில் கலந்துகொள்ள வருமாறு திருமங்கையாழ்வார் ஒவ்வொரு பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை அழைப்பது வழக்கம்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை திருமங்கை ஆழ்வார் திருநகரி கோவிலிலிருந்து பக்தர்கள் புடைசூழ நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலை நோக்கி மேளதாளம் முழங்க எடுத்துச் செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து குரவலூர், மங்கைமடம், காவளம் பாடி, திருமணிக்கூடம் ஆகிய பகுதிகளில் எழுந்தருளியுள்ள பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
Advertisement
Advertisement
ஆழ்வார் செல்லும் வழி எங்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பட்டு வஸ்திரம், தேங்காய் பழம் உள்ளிட்டவைகளை நெய்வேதியம் செய்தனர். இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், திருநகரி ஊராட்சிமன்ற தலைவர் சுந்தரராஜன், பக்த ஜன சபை தலைவர் ரகுநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.