மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தாலும், அதைக்காட்டிலும் நீர் திறப்பு குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தாலும், அதைக்காட்டிலும் நீர் திறப்பு குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 108.43 அடியிலிருந்து 108.44 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 895 கன அடியிலிருந்து 884 கன அடியாக சரிந்தது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 76.21 டி.எம்.சி யாக உள்ளது.