தமிழகத்தில் 9,916-ஆக குறைந்தது கரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதி தீவிரமாக பரவி வந்த கரோனா பாதிப்பு தற்போது 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதி தீவிரமாக பரவி வந்த கரோனா பாதிப்பு தற்போது 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை 9,916 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 4 நாள்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வந்ததும், தற்போது அந்த எண்ணிக்கையில் இருந்து 10 ஆயிரம் குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கரோனா பரவல் குறைந்து வந்தாலும் மருத்துவக் கண்காணிப்பையும், பரிசோதனைகளையும் தொடா்ந்து அதிகரிக்குமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அத்துறை வெளியிட்ட தகவல்படி, வெள்ளிக்கிழமை மட்டும் சென்னையில் 1,475 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 1,224 பேரும், செங்கல்பட்டில் 983 பேரும், திருப்பூரில் 857 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மற்றொருபுறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 21,435 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32 லட்சத்து 4,213-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 55,329 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 30 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,696-ஆக அதிகரித்துள்ளது.