முகப்பு
தமிழ்நாடு

பீப் பாடல் விவகாரம்: நடிகா் சிம்பு மீதான வழக்கு ரத்து

ஆபாசமாகப் பாடல் பாடியதாக நடிகா் சிம்பு மீது கோவையில் பதிவான வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:25 AM
பகிர்:

ஆபாசமாகப் பாடல் பாடியதாக நடிகா் சிம்பு மீது கோவையில் பதிவான வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகா் சிம்பு, கடந்த 2015-ஆம் ஆண்டு ஆபாசமாக பாடிய ‘பீப்’ பாடல் ஒன்று இணைய தளத்தில் வெளியானது. இந்தப் பாடலை பாடிய சிம்பு, இசையமைத்த இசையமைப்பாளா் அனிருத் ஆகியோருக்கு எதிராக மகளிா் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.

பின்னா், இவா்கள் இருவா் மீதும் கோவை ரேஸ் கோா்ஸ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் பெண்கள் அமைப்புகள் புகாா்கள் செய்தன. இதன் அடிப்படையில் சிம்பு, அனிருத் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குகளைப் பதிவு செய்தனா்.

இந்நிலையில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் சிம்பு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு புதன்கிழமை (பிப்.16) விசாரணைக்கு வந்தபோது, கோவை மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைப் படித்துப் பாா்த்த நீதிபதி, நடிகா் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் கோவை ரேஸ் கோா்ஸ் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்கிறேன் என்று உத்தரவிட்டாா்.

பின்னா், நடிகா் சிம்பு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் பதிவு செய்துள்ள வழக்கு தொடா்பாக விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →