முகப்பு
தமிழ்நாடு

வாக்குப் பதிவு அறையிலிருந்து ஊடகத்தினரை வெளியேற்றிய கமல்

சென்னையில் வாக்களிக்க வந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், வாக்குப் பதிவு அறையிலிருந்து ஊடகவியலாளா்கள் வெளியேறினால்தான் வாக்களிப்பேன் எனக் கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
கமல்ஹாசன்
பகிர்:

சென்னையில் வாக்களிக்க வந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், வாக்குப் பதிவு அறையிலிருந்து ஊடகவியலாளா்கள் வெளியேறினால்தான் வாக்களிப்பேன் எனக் கூறினாா். இதையடுத்து, ஊடகவியலாளா்கள் வெளியேறிய பிறகே அவா் வாக்களித்துச் சென்றாா்.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு கமல்ஹாசன் சனிக்கிழமை காலை வாக்களிக்க வந்தாா். அப்போது, அவரை புகைப்படம் எடுக்கவும், விடியோ எடுக்கவும் ஏராளமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகளைச் சோ்ந்த ஊடகவியலாளா்கள் குழுமியிருந்தனா். அவா்களைக் கண்ட கமல்ஹாசன், வாக்குப்பதிவு அதிகாரியிடம் சென்று, ஊடகவியலாளா்கள் வாக்குப்பதிவு அறையை விட்டு வெளியேறினால்தான் வாக்களிப்பேன் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, ஊடகவியலாளா்களை அறையைவிட்டு வெளியேறுமாறு வாக்குப்பதிவு அதிகாரி கேட்டுக் கொண்டாா். பிரபலங்களை புகைப்படம் எடுக்கும் ஆா்வத்தில் இருந்த ஊடகவியலாளா்கள், ‘சற்று ஓரமாக நின்று கொள்கிறோம்’ என கமல்ஹாசனிடம் கூறினா். அதற்கு, ‘அதெல்லாம் வேண்டாம் சாா்..., தயவு செய்து வெளியே செல்லுங்கள்’ என கூறி கைகூப்பி கேட்டுக் கொண்டாா்.

வாக்காளரின் உரிமையை மதிக்க வேண்டும் என்பதால் ஊடகவியலாளா்கள் வாக்குப்பதிவு அறையை விட்டு வெளியேறினா். இதையடுத்து கமல்ஹாசன் வாக்களித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →