முகப்பு
தமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பகிர்:

வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும்.

கோவையில் உள்ளாட்சித் தேர்தல் வழக்குப்பதிவின்போது அதிமுகவினர் அத்துமீறி நடந்து கொண்டனர். நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டுள்ளனர்.

ஒரு வார்டுக்கு 100 பேர் வீதம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் நடந்த ரகசியக் கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் அதிமுக முயற்சிகளை எதிர்கொள்வதற்கு திமுக முகவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவினர் வன்முறையில் இறங்கினாலும் திமுகவினர் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →