கீழ்குந்தா பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்கள், காங்., 3 இடங்கள், அ.தி.மு.க. ஒரு இடம், பா.ஜ., கட்சி ஒரு இடம், சுயே., வேட்பாளர்கள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.
தி.மு.க. கீழ்குந்தா பேரூராட்சியை கைப்பற்றியது. 15-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் காஞ்சனா 67 வாக்குகள் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் நாகம்மா 68 வாக்குகள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.
ஒரு ஓட்டு வித்தியாசத்தால் நாகம்மாள் வெற்றி பெற்றது ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது.