முகப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் செலவுக் கணக்கை 30 நாள்களில் தாக்கல் செய்ய உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் செலவுக் கணக்கை அடுத்த 30 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
மாநில தேர்தல் ஆணையம்
பகிர்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் செலவுக் கணக்கை அடுத்த 30 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பதிவு செய்தது. 

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்டவர்கள், போட்டியின்றி தேர்வான வேட்பாளர்கள் செலவுக் கணக்கை அடுத்த 30 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கணக்குகளை சரியாகத் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த விதமான தேர்தலிலும் போட்டியிட முடியாது எனவும் தாக்கல் செய்யாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.