முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 439 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 439 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 பிப்ரவரி 2022, 7:59 pm IST
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 439 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 60,707 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 439 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதில், அதிகபட்சமாக சென்னையில் 119 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 66 பேரும், செங்கல்பட்டில் 51 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,49,007ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

Advertisement

மற்றொருபுறம் மேலும் 1,209 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.  இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 04,611-ஆக அதிகரித்துள்ளது. 

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 6,393 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 1 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,003-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments