முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 15 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா

​தமிழகத்தில் புதிதாக 15,379 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:06 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 15,379 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 15,379 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,29,655 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 3,043 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 27,17,686 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். மொத்த பலி எண்ணிக்கை 36,886 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 75,083 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:

  • சென்னை - 6,484
  • செங்கல்பட்டு - 1,665
  • கோவை - 863
  • காஞ்சிபுரம் - 580
  • மதுரை - 512
  • திருவள்ளூர் - 893 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.