தமிழ்நாடு

தமிழக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது: முதல்வர் 

DIN

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் காவல் ஜனவரி 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீனவா்கள் 43 போ் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் 12 போ் என மொத்தம் 55 பேரை, கடந்த சில நாள்களுக்கு முன்பு எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். 

இதனிடையே மீனவ சங்கங்கள் மற்றும் உறவினா்களின் கோரிக்கையை ஏற்ற மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் முதற்கட்டமாக ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 12 மீனவா்கள், இலங்கைச் சிறையிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டனா். 
இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் காவல் ஜனவரி 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மீனவர்களை உடனே விடுவிக்க, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT