ஆளுநர் ஆர்.என்.ரவி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.
தமிழகத்தில் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள், இணை நோயுள்ளவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜன.10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள ஓமந்துரார் அரசு மருத்துவக் கல்லூரியில் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.
Advertisement
Advertisement
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.