முழு ஊரடங்கு: மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி
முழு ஊரடங்கில் மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு அளிப்பர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கில் மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு அளிப்பர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 16-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும்.
இதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பினை நல்குவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.