முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 23 ஆயிரம் பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 23,459 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழ்நாட்டில் புதிதாக 23,459 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1,53,046 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 23,459 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,91,959 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 9,026 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 26 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 27,36,986 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,956 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,18,017 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

சென்னை - 8,963
செங்கல்பட்டு - 2,504
கோவை - 1,564
திருவள்ளூர் - 1,393

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.