தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: அனைத்துக் கட்சிகளுடன் இன்று காலை ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று காலை 11.30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

DIN


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று காலை 11.30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்படவுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது போன்ற முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படவுள்ளன. 

ஆனால் ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்திமுடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதன் பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த இறுதிசெய்யப்பட்ட முடிவுகள் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவா் மீது வழக்கு

தொடா் திருட்டில் ஈடுபட்ட நபா் கைது

265 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 7 போ் கைது

முன்விரோதத்தால் இருவருக்கு அரிவாள் வெட்டு

பிறப்புச் சான்று பதிவில் குழந்தையின் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT