தமிழ்நாடு

நெல் கொள்முதல் ஆன்லைன் பதிவை ரத்து செய்யக்கோரி பிப்.3ல் 100 இடங்களில் மறியல்: விவசாயிகள் சங்கம்

DIN

புதுக்கோட்டை: தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு கட்டாயம் என்ற மாநில அரசின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 4 மாவட்டங்களில் 100 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாநிலப் பொதுச்செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அகில இந்தியத் துணைத் தலைவர் கே. பாலகிருஷ்ணன், கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT