FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுக்க ஊர்வலம்

தில்லி குடியரசு நாள் விழாவில் பங்கேற்க நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் மக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On : 26 ஜனவரி 2022, 3:22 pm IST
பகிர்:

தில்லி குடியரசு நாள் விழாவில் பங்கேற்க நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் மக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுக்க பயணிக்கும் வகையில், சென்னை தீவுத்திடலிலிருந்து 3 அலங்கார ஊர்திகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

அதற்கு முன்பாக மெரினா காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன.

மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகளுடன் கூடிய அலங்கார ஊர்தி மதுரை செல்லவுள்ளது.

வ.உ.சிதம்பரனார், பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி ஆகியோரின் சிலைகள் அடங்கிய அலங்கார ஊர்தி கோவையில் ஊர்வலம் செல்லவுள்ளது.

பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகள் உள்ள அலங்கார ஊர்தி ஈரோட்டில் வலம் வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments