முகப்பு
தமிழ்நாடு

ஆன்லைன் வழியிலேயே கல்லூரித் தேர்வுகள்

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியிலேயே தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியிலேயே தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன. தற்போது பாதிப்பு ஓரளவு குறைந்துள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. 

ஆலோசனைக்குப் பிறகு பிப்.1 முதல் 1-12-ம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. கல்லூரிகள் பிப்.1ஆம் தேதி முதல் திறக்கப்படுவதால் செமஸ்டர் தேர்வு எவ்வாறு நடைபெறும் என்கிற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது. 
இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைனில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.