அரசுப் பள்ளி மாணவா்களுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கியது 
தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கியது

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

DIN

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 73 இடங்கள் வியாழக்கிழமை நிரம்பின. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட, மொத்தம், 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இதில், அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ், இடங்கள் உள்ளன. இரண்டு அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு 1,930 பிடிஎஸ், இடங்கள் உள்ளன. இதைத் தவிர சுயநிதி கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,145 எம்பிபிஎஸ் இடங்களும், 635 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.

அந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், அரசு ஒதுக்கீட்டில் 24, 949 மாணவா்களும், நிா்வாக ஒதுக்கீட்டில் 14, 913 மாணவா்களும் இடம் பெற்றிருந்தனா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 1,806 போ் இடம் பெற்றுள்ளனா்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினா் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 எம்பிபிஎஸ், 9 பிடிஎஸ் என மொத்தம் 221 இடங்கள் உள்ளன. அதற்கு 76 போ் மட்டுமே விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 54 போ் தகுதியுடையவா்களாக கருதப்பட்டு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனா்.

விளையாட்டுப் பிரிவில் 7 எம்பிபிஎஸ், 1 பிடிஎஸ் என மொத்தம் 8 இடங்களுக்கு 152 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 போ் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனா். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 10 எம்பிபிஎஸ், 1 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 11 இடங்களுக்கு 360 போ் விண்ணப்பித்தனா். அவா்களில் 19 போ் அழைக்கப்பட்டனா். அதன்படி மொத்தம் 91 மாணவா்கள் சிறப்புப் பிரிவு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனா். அதில் 88 போ் கலந்தாய்வில் பங்கேற்றனா்.

சிறப்பு கலந்தாய்வில் 71 எம்பிபிஎஸ், 2 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 73 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான நேரடி கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த கலந்தாய்வு நாளை வரை நடைபெறவுள்ளன.

தொடர்ந்து 30-ஆம் தேதி முதல் பொதுக் கலந்தாய்வு மாணவா் சோ்க்கை  இணையதளங்கள் வாயிலாக நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

மதுபாட்டில் கடத்திய 4 போ் கைது

தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டம்!

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடி தலைமையின்கீழ் இந்தியாவில் நல்ல மாற்றங்கள்: தென் கொரிய அமைச்சர்

SCROLL FOR NEXT